Saturday, January 9, 2010

தேவநாதன் மகிமை

எங்கோ படித்தது

"கோவிலுக்குள் சென்று திரும்பும்போது
எலுமிச்சம்பழம் கனியானது
தண்ணீர் தீர்த்தமானது
மனிதன் பக்தனானான்"

இதெல்லாஞ்சரி.
கன்னி கர்ப்பவதியானாளே
இதென்ன நியாயம்?

நவீன மகாபாரதம்

கை கால் எடுக்க வேண்டுமா
வலதா இடதா
ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை
ஊமை அடியா
உள் காயம் ஏற்படுத்தவா
காயம் வெளியே தெரிய வேண்டுமா

அதெல்லாம் போதாது போதாது

வேறென்ன செய்ய வேண்டும் தாயே

எம்புருசன் உயிரை எடுக்க வேண்டும்
கை வெட்டுவியோ
கால் வெட்டுவியோ
நள்ளிரவிலோ பட்டப் பகலிலோ
ஸ்டேசனிலோ
வீட்டிலோ
உள்ளேயோ வெளியேயோ
எங்கே வேணுமின்னாலும் நடத்திக்க
இந்தா கூலி

Saturday, December 26, 2009

சற்று முன் கிடைத்த செய்தி

பாலியல் குற்றச்சாட்டின் பேரில் ராஜினமா செய்துள்ள ஆந்திர மாநில ஆளுநர் என்.டி.திவாரி தனது ராஜினமாக் கடிதத்தில் உடல்நலக் குறைவைக் காரணமாகக் காட்டியுள்ளார்.

பின்னே?

இந்த வயசிலே கொள்ளுப் பேத்தி வயசுள்ள பெண்களுடன் ஜல்சா செய்தால் உடம்பு என்னத்துக்கு ஆகுங்கிறேன்.?

அட விடு ராசா!நல்ல டாக்டராப் பாத்து மருந்து சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கோ ராசா.உனக்குன்னே இருக்காங்களே,"அன்புள்ள வாலிப வயோதிக அன்பர்களே..."ன்னு மாசாமாசம் ஊரெல்லாம் ரவுண்டு வர்ராங்களே அந்த மாதிரி டாக்டருங்க கிட்டே காமிச்சுக்க.

இன்னொரு ரவுண்டு வர்ரதுக்குச் சான்ஸ் வராமலா போகப் போகுது?அப்பப் பாத்துக்குவே.

கொஞ்சம் சுத்தமாச்சு

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆந்திர மாநில மேதகு (இதிலெ ஒண்ணுங்குறைச்சலில்லெ)ஆளுநர் என்.டி.திவாரி இன்று மாலை தனது பதவியை ராஜினமா செய்துள்ளாராம்.

புலனாய்வு ஊடகங்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.அடிச்ச அடியில் செத்தது எலி.தூக்கி வெளியே வீசு.

ஊழல் முதல் பாலியல் வரை--காங்கிரஸ் சாதனை!

சமீபத்தில்

இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.  இக்கட்சி 1888ம் ஆண்டு  தொடங்கப்பட்டது,மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் நாட்டு மக்கள் ஒன்று திரண்டு தேச விடுதலைக்காகப் போராடினர்.ஆங்கிலேய அரசின் அடக்குமுறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர்.பலர் ரத்தம் சிந்தினர்.பசி பஞ்சம் பட்டினி என இயற்கையின் இடர்பாடுகள் அனைத்தையும் மிஞ்சி தன்னலம் கருதாமல் மக்கள் போராடியதன் பலனாக1947ல் சுதந்திரமும் கிடைத்தது.

நேற்று

1957ம் ஆண்டு வெளிப்பட்ட முந்த்ரா ஊழல் காரணமாக அன்றைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவியை ராஜினாமா செய்தார்.அதன் பின் பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கெய்ரோன்,மராட்டிய முதல்வர் அந்துலே ஆகியோர் ஊழல் புகார்களின் பேரில் ராஜினாமா செய்தனர்.
பிறகு காங்கிரசுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.போபர்ஸ் ஊழல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு பதவி இழந்தாலும் வெட்கமில்லாமல் இன்றுவரை நீதிமன்றங்களில் போராடி அவ்வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டனர்.

இன்று

பாலியல் புகார் காரணமாக ஆந்திராவின் ஆளுநர் என்.டி.திவாரி இன்று பதவி விலகப் போகிறாராம்.
இந்த எழவில் காங்கிரசைப் பலப்படுத்துவதற்காக ராகுல் காந்தி ஏராளமான மக்களைச் சந்தித்து ஈஈஈஈர்க்கப் போகிராராம்.

எல்லாம் தலையில் ஓஓ......த விதி!

நாளை????