Saturday, January 9, 2010

நவீன மகாபாரதம்

கை கால் எடுக்க வேண்டுமா
வலதா இடதா
ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை
ஊமை அடியா
உள் காயம் ஏற்படுத்தவா
காயம் வெளியே தெரிய வேண்டுமா

அதெல்லாம் போதாது போதாது

வேறென்ன செய்ய வேண்டும் தாயே

எம்புருசன் உயிரை எடுக்க வேண்டும்
கை வெட்டுவியோ
கால் வெட்டுவியோ
நள்ளிரவிலோ பட்டப் பகலிலோ
ஸ்டேசனிலோ
வீட்டிலோ
உள்ளேயோ வெளியேயோ
எங்கே வேணுமின்னாலும் நடத்திக்க
இந்தா கூலி

No comments:

Post a Comment