சமீபத்தில்
இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சி 1888ம் ஆண்டு தொடங்கப்பட்டது,மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் நாட்டு மக்கள் ஒன்று திரண்டு தேச விடுதலைக்காகப் போராடினர்.ஆங்கிலேய அரசின் அடக்குமுறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர்.பலர் ரத்தம் சிந்தினர்.பசி பஞ்சம் பட்டினி என இயற்கையின் இடர்பாடுகள் அனைத்தையும் மிஞ்சி தன்னலம் கருதாமல் மக்கள் போராடியதன் பலனாக1947ல் சுதந்திரமும் கிடைத்தது.
நேற்று
1957ம் ஆண்டு வெளிப்பட்ட முந்த்ரா ஊழல் காரணமாக அன்றைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவியை ராஜினாமா செய்தார்.அதன் பின் பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கெய்ரோன்,மராட்டிய முதல்வர் அந்துலே ஆகியோர் ஊழல் புகார்களின் பேரில் ராஜினாமா செய்தனர்.
பிறகு காங்கிரசுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.போபர்ஸ் ஊழல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு பதவி இழந்தாலும் வெட்கமில்லாமல் இன்றுவரை நீதிமன்றங்களில் போராடி அவ்வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டனர்.
இன்று
பாலியல் புகார் காரணமாக ஆந்திராவின் ஆளுநர் என்.டி.திவாரி இன்று பதவி விலகப் போகிறாராம்.
இந்த எழவில் காங்கிரசைப் பலப்படுத்துவதற்காக ராகுல் காந்தி ஏராளமான மக்களைச் சந்தித்து ஈஈஈஈர்க்கப் போகிராராம்.
எல்லாம் தலையில் ஓஓ......த விதி!
நாளை????
Saturday, December 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment